சுண்டிக்குளத்தில் 115 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது!

ஆசிரியர் - Admin
சுண்டிக்குளத்தில் 115 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது!

சுட்டிக்குளம் -சாலை பகுதியில் சூட்சுமமான முறையில் வாகனம் ஒன்றில் கடத்தப்பட்ட சுமார் 115 கிலோ கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டன. வாகன சாரதி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரத்னாயக்கவுக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைவாக, கிளிநொச்சி மாவட்ட சட்டவிரோத செயற்பாடுகள் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி சத்துரங்க தலைமையிலான குழுவினர் இன்று காலை 9 மணி அளவில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போதே கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

கடல்வழியாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பின்னர் சுண்டிக்குளம் கடற்கரையில் இறக்கப்பட்டு சாலை ஊடாக வாகனத்தில் கடத்தப்பட்ட போதே பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. தேடுதல் பணிக்காக பொலிஸ் குற்றத் தடகவியல் பொலிஸாரின் மோப்ப நாயும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் மற்றும் கிளிநொச்சிப் பொலிஸார் இணைத்து மேற்கொண்டு வருகின்றனர்.



பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு