யாழில் மர்யம் ஜும்ஆ மஸ்ஜித்தின் ஏற்பாட்டில் திடலில் நோன்புப் பெருநாள் தொழுகை

ஆசிரியர் - Admin
யாழில் மர்யம் ஜும்ஆ மஸ்ஜித்தின் ஏற்பாட்டில் திடலில் நோன்புப் பெருநாள் தொழுகை

யாழ்ப்பாணம் மர்யம் ஜும்ஆ மஸ்ஜித்தின் ஏற்பாட்டில் இன்று (05) காலை 6.45 மணியளவில் நோன்புப் பெருநாள் தொழுகை மௌலவி எம்.ஏ.பைசல் (மதனி) அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன், தொழுகையை தொடர்ந்து மௌலவி எம்.ஏ.பைசல் (மதனி) அவர்களின் நோன்புப் பெருநாள் விசேட உரை (பிரசங்கம்) இடம்பெற்றது. 

இன்றைய பெருநாள் தொழுகையில் யாழ் வாழ் முஸ்லிம்கள் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 

மேலும் யாழ்ப்பாணத்தில் நகர்ப்புற முஹிதீன் ஜும்ஆ மஸ்ஜித், முஸ்லிம் வட்டாரம் சின்ன மொஹிதீன் பள்ளிவாசல், முஹம்மதிய்யா ஜும்ஆ மஸ்ஜித் மற்றும் அபூபக்கர் ஜும்ஆ மஸ்ஜித் ஆகிய பள்ளிவாசல்களிலும் பெருநாள் தொழுகை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

தகவல் :- என்.எம். அப்துல்லாஹ் - யாழ்ப்பாணத்திலிருந்து...

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு