தமிழ் மக்களுக்கு சமஷ்டி தீர்வைக் கொண்டுவர வேண்டும்! - இந்திய பிரதமருக்கு விக்கி கடிதம்

இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் சமஷ்டி கட்டமைப்புக்குள் தீர்வு ஒன்றினை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை தலைமை ஏற்று முன்னெடுக்க வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அந்தக் கடிதத்தில் மேலும் 'இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றை உறுதிசெய்யும் வகையில் சமஷ்டி கட்டமைப்புக்குள் தீர்வு ஒன்றினை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை தலைமை ஏற்று முன்னெடுக்கவேண்டும்.
"இலங்கை தமிழ் மக்கள் உங்களிடத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். உங்களிடம் பல விடயங்களை அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழ் மக்கள் தமது பூர்வீக வாழிடங்களில் தொடர்ந்து அரசாங்க அடக்குமுறை, இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் சிங்கள குடியேற்றம் ஆகியவற்றின் பாதிப்புக்களினால் பெரும் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர்.
இலங்கைக்கு விஜயம் செய்தபோது ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவம், நீதி, இறைமை மற்றும் சுய மரியாதையை ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கை தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றுவலியுறுத்தியிருந்தீர்கள்.
இந்தியா தனது அயலவர்கள் சந்தோசமாகவும் திருப்தியாகவும் இருப்பதை உறுதிசெய்யும் நேரம் வந்திருக்கின்றது. மோடி ஆட்சிக்கு முதன் முதலில் வந்தபோது நவீன இந்தியாவின் சிற்பியாக அவர் திகழ்வார் என்று சுவாமி வியானந்தஜி குறிப்பிட்டமை சரியாகி விட்டது இந்த தேர்தல் வெற்றி ஒரு பெரு வெற்றியாகும்." என்றும் குறிப்பிட்டுள்ளார்.