காணி துப்புரவு செய்ய சென்றவருக்கு காத்திருந்த அதிா்ச்சி..!

ஆசிரியர் - Editor I
காணி துப்புரவு செய்ய சென்றவருக்கு காத்திருந்த அதிா்ச்சி..!

வவுனியா- கந்தபுரம் பகுதியில் உள்ள தோட்ட காணி ஒன்றிலிருந்து வெடிக்காத நிலையில் கை குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா கந்தபுரம் பகுதியிலுள்ள தோட்ட காணியை நேற்றைய தினம்  மாலை நிலத்தை பண்படுத்தி தீ வைத்த போது கைக்குண்டொன்று இருந்து வெடித்துள்ளது. 

அப்பகுதியில் வெடிக்காத நிலையில் குண்டுகள் இருக்கலாம் என சந்தேகம் கொண்ட  உரிமையாளர் இன்று வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

பொலிசாரிடம் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து சம்பவ இடத்திற்குச் இன்று சென்ற  பொலிசார் அப்பகுதியில் கைக்குண்டு ஒன்றினை அவதானித்துள்ளார். 

அப்பகுதியில்  தேடுதல் மேற்கொண்டபோது குண்டுகள் இருப்பதாகவும் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று விஷேட அதிரடி படையினரின் 

உதவியுடன் அப்பகுதியை மேலும் அகழ்வு பணியை மேற்கொள்ளவிருப்பதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் 

பொலிசார் தெரிவித்துள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு