சாதி சண்டையால் ஆலய திருவிழா நிறுத்தம்..! நீதிமன்றம் செல்லும் மக்கள்.

ஆசிரியர் - Editor I
சாதி சண்டையால் ஆலய திருவிழா நிறுத்தம்..! நீதிமன்றம் செல்லும் மக்கள்.

யாழ்.மிருசுவில் சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தின் திருவிழா சாதி பிரச்சினை காரணமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஆலய திருவிழாவை நிறுத்தியவா்களுக்கு எதிராக கிராம மக்கள் நீதிமன்றம் செல்லவுள்ளனா். 

கடந்த வருட திருவிழாவின் போது ஒரு சமூகத்தினர் வடம் பிடித்து தேர் இழுக்கக்கூடாது என்பதற்காக ஜே.சி.பி கனரக இயந்திரத்தின் மூலம் தேர் இழுந்து அனைத்துலக சைவத் தமிழ் மக்களுக்கும் அவமானத்தை சிலர் ஏற்படுத்தினர்.

இந்த வருட திருவிழாவுக்கான ஏற்பாடாக, தென்மராட்சிப் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் எந்தவித வேறுபாடுகளும் இன்றி திருவிழாவை நடத்துமாறு ஆலய நிர்வாகத்தினரிடம் கோரப்பட்டது.

எனினும், ஆலய நிர்வாகத்தினர் திடீரென திருவிழாவை நிறுத்தியுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு