எச்சரிக்கின்றார் முன்னாள் முதலமைச்சர்!

ஆசிரியர் - Admin
எச்சரிக்கின்றார் முன்னாள் முதலமைச்சர்!

ஊரடங்குவேளையில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல்கள் 1983 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அரசபயங்கரவாதத்தை ஞாபகப்படுத்துவதாக தெரிவித்துள்ள வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் விக்னேஸ்வரன், இந்த சந்தர்ப்பத்தில் தமிழ்,சிங்களமற்றும் முஸ்லிம் புத்திஜீவிகளும் நியாயமான அரசியல்வாதிகளும் சமயோசிதமாக காய்களை நகர்த்தவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகச்சுட்டிக்காட்டியுள்ளார்.  

முஸ்லிம் மக்களுக்கு எதிராக அண்மைய நாட்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறைகளை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள விக்னேஸ்வரன் அவர்கள்,தமிழ் மக்களின் மீது இன அழிப்புயுத்தத்தை மேற்கொண்டவர்களின் பார்வை தற்போது முஸ்லிம் சகோதரர்களின் மீது திரும்பியிருப்பதாகத் தென்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

திரு.விக்னேஸ்வரன் அவர்கள் வெளியிட்டுள்ளஅறிக்கையின் விபரம் வருமாறு -

உயிர்த்தஞாயிறுதற்கொலைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுபலநாட்கள் கடந்துள்ளநிலையில் முஸ்லிம் மக்களுக்கெதிராகமேற்கொள்ளப்பட்டுள்ளவன்முறைகளின் பின்னணியைஆராய்ந்துபார்க்கும்போது இது நன்குதிட்டமிட்டதொடர் நடவடிக்கைஒன்றின் அங்கம் என்பதைஎடுத்துக் காட்டுகிறது.ஊரடங்குஉத்தரவுபிறப்பிக்கப்பட்டிருந்தவேளைவன்முறையாளர்கள் முஸ்லிம் மக்கள் மீதுதாக்குதல் நடத்தியதாகவும் பொலிஸ் நிலையங்களுக்குசிலமீற்றர்கள் தொலைவில் அவர்களின் சொத்துக்களைநாசம் செய்ததாகவும் வெளிவரும் செய்திகள் 1983 ஆம் ஆண்டுதமிழ் மக்களுக்குஎதிராகமேற்கொள்ளப்பட்டஅரசபயங்கரவாதத்தைஞாபகப்படுத்துகிறது.   

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தைஅரசியல் ரீதியாகவும் இராணுவரீதியாகவும் பலவீனப்படுத்திஅழிப்பதற்குமற்றொருசிறுபான்மை இனத்தைபல்வேறுவழிகளிலும் தந்திரமாகபயன்படுத்தினசிங்களஅரசாங்கங்களும் படையணி இயந்திரமும்.கடந்தகாலங்களில் எமதுஇரு சமூகங்களையும் மோதவிட்டுவெற்றிகரமாகஇவை செயற்பட்டுள்ளன. 

விடுதலைவேண்டிபோராடியதமிழ் மக்களை இன அழிப்புயுத்தத்தின் மூலம் பலவீனப்படுத்தியுள்ளசிங்களபேரினவாதத்தின் பார்வைதற்போதுஎமது முஸ்லிம் சகோதரர்களின் மீதுதிரும்பியிருக்கின்றது.  எவ்வாறுஆரம்பகாலங்களில் தமிழ் மக்களின் பொருளாதார,சமூககட்டமைப்புக்கள் இலக்குவைக்கப்பட்டனவோஅதேபோல, இன்று முஸ்லிம் மக்களின் பொருளாதார,சமூககட்டமைப்புக்கள் இன வன்முறைஎன்றபோர்வையில் இலக்குவைக்கப்பட்டுள்ளன. 

கடந்தகாலஅரசாங்கங்களின் அனுசரணையுடன் வளர்க்கப்பட்ட முஸ்லிம் பயங்கரவாதசக்திகளேஉயிர்த்தஞாயிறுதாக்குதல்களில் ஈடுபட்டனஎன்பதைஅரசாங்கஅமைச்சர்களேவெளிப்படையாக கூறியுள்ளனர். இந்தஉள்நாட்டுபயங்கரவாதஅமைப்புக்களுக்குவெளிநாட்டுபயங்கரவாதசக்திகளுடன் ஏற்பட்டுள்ளதொடர்புகளைமுடிந்தளவுக்குபயன்படுத்தி ஏனைய சமூகங்களைஅடக்கிஆள்வதற்கும் சர்வதேசஅனுகூலங்களைபெற்றுக்கொள்வதற்கும் முயலும் பேரினவாதத்தின் திட்டங்களுக்குநாம் மீண்டும் பலியாகிவிடக்கூடாது.   தமிழ் மக்களைபயங்கரவாதிகளாகசித்தரித்துஅவர்களின் உரிமைக்கானபோராட்டத்தைசர்வதேசசமூகத்தின் உதவிகளுடன் நசுக்கியதைபோலதற்போது முஸ்லிம் மக்களைபயங்கரவாதிகளாகசித்திரித்துஅவர்களின் அரசியல் மற்றும் பொருளாதாரபலத்தைமழுங்கடிக்கும் கைங்கரியங்கள் நடந்தேறுவதைநாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.   

இந்தசந்தர்ப்பத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் புத்திஜீவிகளும் அரசியல்வாதிகளும் கடந்தகாலகசப்புணர்வுகளைமறந்துஎதிர்காலத்தைகருத்தில் கொண்டுசமயோசிதமாகக்காய்களைநகர்த்தவேண்டும்.எமதுசிங்களபுத்திஜீவிகள் மற்றும் நியாயமானசிங்களஅரசியல்வாதிகள்பேரினவாதநகர்வுகள் இராணுவஆட்சியொன்றை இலங்கையில் ஏற்படுத்தாதுபார்த்துக் கொள்ளவேண்டும். சிங்களபௌத்தபேரினவாதம் இராணுவம் மூலமாகசிறுபான்மையினரை இருந்த இடம் தெரியாமல் ஆக்கமுற்பட்டால் அதனைமுறியடிக்கநாம் யாவரும் தயாராகவேண்டும். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு