48 மணி நேரம் மேலும் கால அவகாசம்..! அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துவிடுங்கள்.

ஆசிரியர் - Editor I
48 மணி நேரம் மேலும் கால அவகாசம்..! அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துவிடுங்கள்.

இராணுவ சீருடைகள், வாள்கள், கூாிய ஆயுதங்கள் இருப்பின் அதனை அவற்றை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பதற்கான கால எல்லை மேலும் 48 நேரமாக நீடிக்கப்பட்டுள்ளது. 

சட்டவிரோத வாள், கூரிய கத்திகள், இராணுவ மற்றும் பொலிஸ் சீருடைகள் போன்ற  ஆடைகளை, பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க நேற்றுவரை வழங்கப்பட்ட கால எல்லை, 

மே 8 வரை நீடிக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. நாடுமுழுவதும் தற்போது முன்னெடுக்கப்படும் சுற்றிவளைப்புத் தேடுதலில் போது வாள்கள், 

கூரிய ஆயுதங்கள் மற்றும் இராணுவச் சீருடைகள் என்பன கைப்பற்றப்படுகின்றன. அவற்றை வைத்திருப்போர் பயங்கரவாதத் தடைச்சட்டம் 

மற்றும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்டம் ஆகியவற்றின் கீழ் தடுத்துவைக்கப்படுகின்றனர்.

இதனால் அவற்றையில் உடமையில் வைத்திருப்போர் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பதன் மூலம் மேற்படி குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்படுவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு