இஸ்லாமிய தீவிரவாதிகளை பிடிக்க முடியவில்லை என்பதற்காக பல்கலைக்கழக மாணவா்களுக்கு பயங்கரவாத முத்திரை குத்தாதீா்கள்..!

ஆசிரியர் - Editor I
இஸ்லாமிய தீவிரவாதிகளை பிடிக்க முடியவில்லை என்பதற்காக பல்கலைக்கழக மாணவா்களுக்கு பயங்கரவாத முத்திரை குத்தாதீா்கள்..!

நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் தமிழீழ விடுதலை புலிகளின் நினைவேந்தல்கள் யாழ்.பல்கலைகழக வளாகத்திற்குள் வெளிப்படையாக நடைபெற்றது. இஸ்லாமிய தீவிரவாதிகள் கிடைக்கவில்லை என்பதற்காக பல்கலைக்கழக மாணவா்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்தாதீா்கள்.

மேற்கண்டவாறு பீல்ட் மாா்ஷல் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளாா். தமிழ் ஊடகம் ஒன்றுக்கு அவா் வழங்கியுள்ள செய்தியிலேயே மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது இஸ்லாமிய தீவிரவாதிகள் கிடைக்கவில்லை என்பதற்காக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் ஆகியோர் மீது எடுத்த எடுப்பில் பயங்கரவாதிகள் முத்திரை குத்த முடியாது. 

அவர்கள் குற்றவாளிகள் இல்லையெனில் வழக்கைத் தொடராமல் உடன் விடுவிக்க வேண்டும். நல்லாட்சியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் வெளிப்படையாக விடுதலைப் புலிகளின் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

இது கடந்த ஆட்சியில் மறைமுகமாக இடம்பெற்றன. இந்த ஆட்சியில் வெளிப்படையாக இடம்பெறுகின்றன. இதுதான் உண்மை என குறிப்பிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு