காத்தான்குடியில் தீவிரவாதிகளின் மறைவிடம் அதிரடிப்படை முற்றுகைக்குள்..!

ஆசிரியர் - Editor I
காத்தான்குடியில் தீவிரவாதிகளின் மறைவிடம் அதிரடிப்படை முற்றுகைக்குள்..!

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்முனை ஒல்லிக்குளம் பகுதியில் தற்கொலை தாக்குதல்தாரி சஹாரான் குழுவினர் தங்கியிருந்த இடம் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இங்கு குண்டுகளை அடைத்து கொண்டு செல்ல பயன்பாடுத்தப்பட்ட பிளாஸ்டிக் குழாய்களும் மீட்கப்பட்டுள்ளது. இதே போன்ற குழாய்களே குண்டுகளுடன் கட்டுநாயக்கா விமானம் நிலையத்துக்கு அண்மையில் கடந்த 21 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது. 

இங்கிருந்தே கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 100 மீற்றர் தூரத்தில் யாரும் உள்ளே நுழையும் போது அதனை கண்டுகொள்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதுடன் 

இலகுவில் தாம் வெளியேறி செல்லும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு