மேலும் 4 இஸ்லாமிய அமைப்புக்களுக்கு தடை..! தீவிரவாதிகளுடன் தொடா்பா..?

ஆசிரியர் - Editor I
மேலும் 4 இஸ்லாமிய அமைப்புக்களுக்கு தடை..! தீவிரவாதிகளுடன் தொடா்பா..?

இலங்கையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களை தொடா்ந்து மேலும் 4 இஸ்லாமிய அமைப்புக்களுக்கு தடை விதிக்கவுள்ளதாக மூத்த அதிகாாி ஒருவரை மேற்கோள்காட்டி சண்டே மோா்ணிங் செய்தி வெளியிட்டிருக்கின்றது. 

அவசரகாலச் சட்ட விதிமுறைகளின் கீழ், மேலும் 4 இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்யும் அறிவிப்பு அடுத்த வாரம் வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளது.

உயிர்த்த குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையவை என கண்டறியப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாத் மற்றும், ஜமியத்து மில்லாது இப்ராகிம் ஆகிய அமைப்புகள் கடந்த வாரம்  அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் தடை செய்யப்பட்டன.

இந்த அமைப்புகள் தீவிரவாத அமைப்புகளாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளன. இந்த அமைப்புகளுடன் தொடர்புகளை கொண்டிருந்த மேலும் நான்கு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளே அடுத்த வாரம் தடை செய்யப்படவுள்ளன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு