தீவிரவாதி சஹ்றான் ஹாசிமின் மனைவி வழங்கிய அதிா்ச்சி வாக்குமூலம்..!

ஆசிரியர் - Editor I
தீவிரவாதி சஹ்றான் ஹாசிமின் மனைவி வழங்கிய அதிா்ச்சி வாக்குமூலம்..!

உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களின் சூத்திரதாாியான சஹ்றான் ஹாசிம் மதத்திற்கான உயிா்தியாகம் செய்யப்போவதாக தன்னிடம் கூறினாா். என சஹ்றானின் மனைவி பொலிஸாருக்கு சாட்சியம் வழங்கியிருக்கின்றாா். 

சாய்ந்தமருது பகுதியில் வீடொன்றின் மீத நடாத்தப்படட தற்கொலை தாக்குதலில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் சஹ்றானின் மனைவி இந்த சாட்சியத்தை வழங்கியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில், 

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமின்  மனைவி அப்துல் காதர் பாத்திமாவும், கடுவாபிட்டிய தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய மொகமட் ஹஸ்துனின்  மனைவி சாரா எனப்படும் புலஸ்தினி ராஜேந்திரனுமே, 

ஏப்ரல் 19ஆம் திகதி, கிரிஉல்லவில் உள்ள ஆடையகத்தில் ஒன்பது வெண்ணிய மேற்சட்டை மற்றும் பாவாடைகளை வாங்கியுள்ளனர். “எதிர்காலத்தில் தேவை என்பதாலேயே அதனை வாங்கியதாகவும், அந்த ஆடைகள் மற்றும் ஏனைய பொருள்கள் ஏன் வாங்கப்பட்டன என்று பின்னர் தெரியவரும் என்றும் சாரா என்னிடம் கூறினார்.

எதற்காக வெண்ணிற ஆடைகள் வாங்கப்பட்டன என்பது சாராவுக்கு மட்டும்தான் தெரியும்.” என்றும் அவர் கூறியுள்ளார். எனினும் சாரா, ஏப்ரல் 26ஆம் திகதி சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டுவிட்டார்.

மதத்துக்காக உயிரைக் கொடுக்கப் போவதாக தனது கணவன் சஹ்ரான் கூறினார் என்றும் எனினும், அது தற்கொலைத் தாக்குதலாக இருக்கும் என்று தனக்குத் தெரியாது என்றும் பாத்திமா தெரிவித்துள்ளார்.

கடைசியாக ஏப்ரல் 19ஆம் திகதி, சஹ்ரானை பார்த்ததாகவும், அன்றைய தினம் சம்மாந்துறைக்குத் திரும்பும் போதே, வெண்ணிற ஆடைகளை வாங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.

“ஒரு பையில் சஹ்ரான் என்னிடம் பணத்தைக் கொடுத்தார். அந்த பையில் எவ்வளவு பணம் இருந்தது என்று எனக்குத் தெரியாது, 

அந்தப் பையில் இருந்து எடுத்த பணத்தில்தான், சம்மாந்துறைக்குச் சென்ற வாகன கட்டணத்தைக் கொடுத்ததுடன், 29 ஆயிரம் ரூபாவுக்கு உடைகளையும் வாங்கியிருந்தேன்” என்றும் பாத்திமா தெரிவித்துள்ளார்.

குண்டுவெடித்த வீட்டில் இருந்து 9 இலட்சம் ரூபாவைக் கைப்பற்றியதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

தான், வத்தளை, கொள்ளுப்பிட்டி, கல்கிசை, பாணந்துறை, கட்டான என பல்வேறு இடங்களி்ல் வசித்ததாகவும், ஏப்ரல் 20 தொடக்கம் 26 வரை நிந்தவூரில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்ததாகவும், பாத்திமா தெரிவித்துள்ளார்.

பொலிஸார் தேடுதல் நடத்தும் என்ற அச்சத்தில் ஏப்ரல் 26ஆம் திகதி அந்த வீட்டில் இருந்து வெளியேறி, வான் ஒன்றில் சஹ்ரானின் இரண்டு சகோதரர்கள், சகோதரி, அவரது கணவன், பெற்றோர் மற்றும் குழந்தைகளுடன், சாய்ந்தமருது வந்ததாகவும், 

அங்கு வந்து சற்று நேரத்தில் குண்டு வெடிப்பு இடம்பெற்றதாகவும் அவர் விசாரணைகளில் கூறியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு