வடக்கின் பல பாகங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை!

ஆசிரியர் - Admin
வடக்கின் பல பாகங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை!

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று காலை 8.30 மணியிலிருந்து மாலை 05.30  மணி வரை, மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

யாழ்.பிரதேசத்தில்: 

இன்று ஞாயிற்றுக்கிழமை (28) காலை 08.30 மணி முதல் மாலை 05.30 மணி வரை யாழ். சுன்னாகம் இலங்கை வங்கிப் பிரதேசம், நாவற்குழி கேரதீவு வீதி, தச்சன் தோப்பு, கோகிலாக் கண்டி, மறவன்புலவு, தனங்கிளப்பு, அறுகுவேலி, பத்தனை, சுதுமலை, மாப்பியன் ஆகிய பகுதிகளிலும்,

நாளை  திங்கட்கிழமை (29) காலை 08.30 மணி முதல் மாலை 05.30 மணி வரை யாழ். பருத்தித்துறை வெளிச்சவீடு ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு