திரையுலகில் 25 வருடங்கள் - இயக்குநர் ஷங்கருக்கு சர்ப்ரைஸ் கொடுத்து கவுரவித்த இயக்குநர்கள்

ஆசிரியர் - Admin
திரையுலகில் 25 வருடங்கள் - இயக்குநர் ஷங்கருக்கு சர்ப்ரைஸ் கொடுத்து கவுரவித்த இயக்குநர்கள்

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர். தனது படங்கள் மூலமாக தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு கொண்டு செல்லும் இவரது படங்கள் வணிக ரீதியிலும் பெரிதாக பேசப்படும்.

இயக்குநர் ஷங்கர் சினிமாவுக்கு வந்து 25 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அவரை பெருமைப்படுத்தும் விதமாக ஷங்கர் 25 என்ற நிகழ்ச்சியை ஷங்கரிடம் உதவி இயக்குநர்களாக இருந்தவர்கள் மற்றும் இருப்பவர்கள் இணைந்து கடந்த ஆகஸ்ட் மாதம் கொண்டாடினர்.

இந்த நிலையில், ஷங்கருடன் நட்புடன் இருக்கும் இயக்குநர்கள் பலரும் இணைந்து ஷங்கரை பாராட்டி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். இயக்குநர் மிஷ்கின் அவரது அலுவலகத்தில் ஒருங்கிணைத்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்கள் மணிரத்னம், லிங்குசாமி, பாண்டிராஜ், மோகன் ராஜா, கவுதம் மேனன், எழில், சசி, பா.ரஞ்சித், வசந்தபாலன், பாலாஜி சக்திவேல், அட்லி, உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு ஷங்கரை கவுரவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு கேக் ஒன்றும் வெட்டப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் ஷங்கர் தவிர மற்ற அனைவரும் எஸ் 25 என்று எழுதப்பட்டிருந்த நீல நிற டீசர்ட் அணிந்து பங்கேற்றிருந்தனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு