வார ராசிப்பலன் - ஏப்ரல் 14 முதல் 21 வரை சித்திரை 1 முதல் 7 வரை

ஆசிரியர் - Admin
வார ராசிப்பலன் - ஏப்ரல் 14 முதல் 21 வரை சித்திரை 1 முதல் 7 வரை

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள் 
கடகம் 13-04-2019 அதிகாலை 03.15 மணி முதல் 15-04-2019 அதிகாலை 05.57 மணி வரை.
சிம்மம் 15-04-2019 அதிகாலை 05.57 மணி முதல் 17-04-2019 காலை 07.15 மணி வரை.
கன்னி 17-04-2019 காலை 07.15 மணி முதல் 19-04-2019 காலை 08.25 மணி வரை.
துலாம் 19-04-2019 காலை 08.25 மணி முதல் 21-04-2019 பகல் 11.10 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
17.04.2019 சித்திரை 04 ஆம் தேதி புதன்கிழமை திரயோதசி திதி உத்திரம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை

18.04.2019 சித்திரை 05 ஆம் தேதி வியாழக்கிழமை சதுர்தசி திதி ஹஸ்தம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.30 மணி முதல் 10.30 மணிக்குள் மிதுன இலக்கினம். வளர்பிறை

மேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.
சிரிக்க சிரிக்க பேசி எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. அதிசாரமாக குரு 9-லும், சுக்கிரன் லாப ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் எதிர்பாராத பணவரவுகள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. வீடு வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பும் அமையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றமான நிலையிருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. முருக வழிபாடும் விஷ்ணு வழிபாடும் செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 17, 18, 19, 20.

ரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன் 10, 11-ல் சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் புதன் சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொளாதார நிலை மேலோங்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் சாதகமான பலன்களை அடையலாம். சொந்த பூமி மனை வாங்கும் விஷயங்களில் சற்று கவனமுடன் செயல்பட்டால் அனுகூலப்பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்பட்டால் லாபம் கிட்டும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு கைநழுவிய பதவி உயர்வுகளை தடையின்றி பெறுவார்கள். சிவ வழிபாடு முருக வழிபாடு செய்வது நல்லது. சித்ரா பௌர்ணமி அன்று கிரிவலம் சென்றால் மேன்மையான பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் - 14, 19, 20.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.
நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கேற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் குணம் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் புதன் 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். குரு அதிசாரமாக 7-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் கைகூடும். பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன்களை அடைவீர்கள். தாராள தனவரவுகள் ஏற்பட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வது உத்தமம். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும். புதிய யுக்திகளை கையாண்டு தொழிலை விரிவு செய்வீர்கள். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுப காரியங்கள் தடபுடலாக கைகூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகத்திலும் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் கிடைக்கும். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 15, 16.

கடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.
எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 6-ல் சனி, கேது, 10-ல் சூரியன், 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். மறைமுக எதிர்ப்புகள் விலகி லாபம் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். தடைபட்ட பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்ல கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினைப் பெற முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலை தேவைக்கேற்ற படியிருக்கும். புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக இருக்கும். அன்றாட பணிகளை தடையின்றி செய்து முடிப்பீர்கள். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். வீடு வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். அம்மன் வழிபாடு செய்தால் சிறப்பான பலன்கள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 14, 17, 18.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதும் 10-ல் செவ்வாய், 11-ல் ராகு சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். சிறப்பான பணவரவு, இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் மேலோங்கும் நிலை உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் நல்ல லாபத்தினை அடைவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு தடைபட்ட பதவி உயர்வுகள் கிடைப்பதோடு எதிர்பார்க்கும் இடமாற்றங்களும் கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் விலகி கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சிலருக்கு சொந்த வீடு வாகனம், போன்றவற்றை வாங்கும் யோகம் அமையும். பிரிந்த உறவுகளும் தேடி வந்து நட்பு கரம் நீட்டும். கொடுக்கல்- வாங்கல் லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவும் முடியும். சிவ வழிபாடு செய்வது, விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுவது மிகவும் நல்லது. 
வெற்றி தரும் நாட்கள் - 15, 16, 19, 20.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.
மிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசக் கூடிய கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் சனி, கேது, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள், குடும்பத்தில் நிம்மதி குறைவு நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். முடிந்த வரை நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும் என்பதால் அவற்றை தவிர்ப்பது உத்தமம். உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது சிறப்பு. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது சிறப்பு. சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்படும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் அடைய வேண்டிய லாபத்தை அடைவார்கள். வர வேண்டிய வாய்ப்புகளும் வந்து சேரும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமதம் ஏற்பட்டாலும் வேலைபளு சற்று குறையும். சிவ வழிபாடு செய்வது, பிரதோஷ விரதமிருப்பது, பௌர்ணமி அன்று கிரிவலம் செல்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 14, 17, 18.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.
பேச்சிலும் செயலிலும் முடிந்த வரை பிறர் மனதை புண்படுத்தாமல் செயல்படும் துலா ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன் 5-ல் சஞ்சரிப்பதும் 3-ல் சனி, கேது சஞ்சரிப்பதும் உங்களுடைய செயல்களுக்கு பரிபூரண வெற்றியினை தரும் அமைப்பாகும். வலமான பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். தடைப்பட்ட சுபகாரியங்கள் தடை விலகி கைகூடும். உங்கள் ராசிக்கு செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் கடன்கள் சற்று குறையும். கணவன்-- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். பலருக்கு உதவிகள் செய்யக் கூடிய வாய்ப்பும் கிட்டும். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெற முடியும். சிவ வழிபாடு செய்வது, பிரதோஷ விரதம் இருப்பது நல்லது. பௌர்ணமி அன்று கிரிவலம் செல்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 14, 15, 16, 19, 20.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் புதன், 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் மேன்மையான பலன்களை அடைவீர்கள். குரு அதிசாரமாக 2-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத பணவரவுகள் கிடைத்து உங்களுடைய நெருக்கடிகள் குறையும். எந்த சிக்கலையும் சமாளித்து ஏற்றங்களை அடைவீர்கள். பொருளாதார நிலை ஒரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். அசையும் அசையா சொத்துக்கள் விஷயத்தில் சற்று கவனமுடன் செயல்பட்டால் ஏற்படும் சிறு சிறு விரயங்களை தவிர்க்கலாம். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய மருத்துவ செலவுகள் உண்டாகாது. கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த வாக்கையும் காபாற்ற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றமான நிலை உண்டாகும். கூட்டாளிகள் வழியிலும் புதிய வாய்ப்புகள் வந்து சேரும். தொழிலாளர்களின் ஒத்துழைப்புடன் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் சில தடைகளுக்குப் பின்பே கிடைக்கும். சனி பகவான் வழிபாடு செய்வது, சனிக்கவசங்கள் படிப்பது நன்மையை அளிக்கும்.
வெற்றி தரும் நாட்கள் - 15, 16, 17, 18.

தனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.
எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட தனுசு ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் புதன் சஞ்சரிப்பதும் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் நல்லது என்பதால் எதிர்பாராத தனசேர்க்கை கிடைக்கும் என்றாலும் ஜென்ம ராசியில் சனி, கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள், உடனிருப்பவர்களால் நிம்மதி குறைவு உண்டாகும். விட்டு கொடுத்து செல்வது நல்லது. ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும். பூர்வீக சொத்துக்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றங்கள் உண்டாகும். கூட்டாளிகளால் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் அதன் மூலம் லாபம் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனத்துடன் செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். வேலை பளுவும் சற்று அதிகரிக்கும். சனிப்ரீதியாக ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபட்டால் நற்பலன்கள் கிடைக்கும்.
வெற்றி தரும் நாட்கள் - 17, 18, 19, 20.
சந்திராஷ்டமம் - 13-04-2019 அதிகாலை 03.15 மணி முதல் 15-04-2019 அதிகாலை 05.57 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.
எல்லோருக்குமே மரியாதை கொடுக்கும் பண்பும் கள்ளம் கபடமின்றி ஆத்மார்த்தமாக பழகும் குணமும் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், 12-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் நீங்கள் எந்த செயல் செய்வதென்றாலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றியினைப் பெற முடியும். குடும்பத்தில் உள்ளவர்களையும் உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவுகளை குறைத்துக் கொள்ளலாம். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கைகூட தாமத நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை செய்து முடிப்பதில் சற்று இடையூறுகளை சந்திக்க நேர்ந்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க முடியும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரித்தாலும் எதிர்பார்த்த லாபத்தை பெற்று விடுவீர்கள். பிரதோஷ தினத்தன்று சிவ பெருமானையும், நந்தி வழிபாட்டையும் மேற்கொண்டால் சகல பிரச்சினைகளும் விலகும். பௌர்ணமி அன்று கிரிவலம் செல்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 14, 19, 20.
சந்திராஷ்டமம் - 15-04-2019 அதிகாலை 05.57 மணி முதல் 17-04-2019 காலை 07.15 மணி வரை.

கும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும் வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாத குணமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சனி, கேது சஞ்சரிப்பதும் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதும் எல்லா வகையிலும் ஏற்றத்தை ஏற்படுத்தக்கூடிய நல்ல அமைப்பாகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். எடுக்கும் முயற்சியில் வெற்றி, நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்படையும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் தடை விலகி கைகூடும். சிறப்பான பண வரவால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை உண்டாக்கும். பிரிந்த உறவுகளும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகள் விலகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். விஷ்ணு வழிபாடு செய்வது, ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 14, 15, 16.
சந்திராஷ்டமம் - 17-04-2019 காலை 07.15 மணி முதல் 19-04-2019 காலை 08.25 மணி வரை.

மீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .
அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய அநியாயங்களை பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட மீன ராசி நேயர்களே ஜென்ம ராசியில் புதன், 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவி சிறப்பாக கிடைக்கும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் எதிலும் சிக்கனமாக செயல்படுவது சிறப்பு. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி சாதகமான பலன்கள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே வீண் விரயங்களை தவிர்க்க முடியும். வீடு வாகனம் போன்றவற்றை வாங்கும் முயற்சிகளை சில காலம் தள்ளி வைப்பது உத்தமம். சூரியன் 2-ல் இருப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பேச்சில் நிதானத்துடன் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அபிவிருத்தியும் லாபமும் பெருகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் சிறப்பாகவே இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கப் பெறுவதால் மன மகிழ்ச்சி உண்டாகும். சிவ வழிபாடும், அம்மன் வழிபாடும் செய்வது நல்லது. பௌர்ணமி அன்று கிரிவலம் சென்று வந்தால் மனமகிழும் மாற்றங்கள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 15, 16, 17, 18.
சந்திராஷ்டமம் - 19-04-2019 காலை 08.25 மணி முதல் 21-04-2019 பகல் 11.10 மணி வரை.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு