துலாம் - விகாரி வருட பலன்கள் 2019-2020

ஆசிரியர் - Admin
துலாம் - விகாரி வருட பலன்கள் 2019-2020

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்
எதிலும் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற இலட்சியம் கொண்ட துலா ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த விகாரி ஆண்டில் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். உங்கள் ஜென்ம ராசிக்கு 3-ஆம் வீட்டில் சனி, கேது சஞ்சரிப்பதும் தன ஸ்தானமான 2-ல் குரு சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், எதிலும் துணிந்து செயல்படக் கூடிய ஆற்றலும் உண்டாகும். எல்லா வகையிலும் லாபங்கள் பெருகுவதால் பொருளாதாரம் மேன்மையடையும். குடும்பத் தேவைகள் அனைத்தையும் தடையின்றி பூர்த்தி செய்ய முடியும். 

திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்களுக்கான முயற்சிகள் தடையின்றி கைகூடி தக்க சமயத்தில் நடைபெறும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சியளிக்கும் சம்பவங்கள் நடைபெறும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். அசையும், அசையா சொத்துக்களை வாங்கி சேர்ப்பீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும். உற்றார், உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியினை அளிக்கும். புரிந்து கொள்ளாமல் பிரிந்து சென்றவர்களும் தேடி வந்து நட்பு கரம் நீட்டுவார்கள். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றி நல்ல பெயர் எடுப்பீர்கள். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். 

திருக்கணிதப்படி வரும் ஐப்பசி மாதம் 19-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் 05-11-2019 முதல் (வாக்கியப்படி ஜப்பசி 12-ஆம் தேதி) குரு பகவான் முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் பண விஷயத்தில் வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். 

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளால் அனுகூலம் கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். புதிய முயற்சிகளை கையாண்டு தொழிலை விரிவு செய்யும் நோக்கம் நிறைவேறும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் அனைத்தும் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் அடைவார்கள். உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களும் உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைக்கப் பெறுவதால் வாழ்க்கை தரம் உயர்வடையும்.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். கடந்த கால பாதிப்புகள் விலகி அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். உணவு விஷயத்தில் சற்று கவனம் எடுத்து கொள்வது நல்லது. நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகளை எடுத்து கொண்டு இருப்பவர்களுக்கு நோயின் தாக்கம் குறைந்து படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை நீடிப்பதால் மனநிம்மதி உண்டாகும். 

குடும்பம் பொருளாதார நிலை
குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் தடையின்றி கைகூடும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். சிலருக்கு புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். பொருளாதாரநிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பிரிந்து சென்ற உறவினர்களும் தேடி வந்து ஒற்றுமைப் பாராட்டுவார்கள். சொந்த பூமி, மனை வாங்கக் கூடிய யோகங்கள் உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.

உத்தியோகம்
பணியில் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகளும், உத்தியோக உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். செய்யும் பணிகளுக்கு தகுந்த பாராட்டுதல்களும் உயர் அதிகாரிகளிடமிருந்து கிடைக்கப் பெறுவதால் மனநிம்மதியுடன் பணிபுரிவீர்கள். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மூலம் வேலை பளுவைக் குறைத்துக் கொள்ள முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் தடையின்றி நிறைவேறும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப் பெறுவதால் குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு அமையும்.

தொழில் வியாபாரம்
நல்ல வாய்ப்புகள் தேடி வருவதால் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். புதிய நவீன யுக்திகளை கையாண்டு அபிவிருத்தியை பெருக்குவீர்கள். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையும் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளால் அனுகூலங்கள் உண்டாகும். பயணங்களால் நற்பலன்களை அடைவீர்கள். போட்டி பொறாமைகளை சமாளிக்க கூடிய வாய்ப்பும், ஆற்றலும் உண்டாகும். நல்ல வேலையாட்கள் கிடைப்பார்கள்.

கொடுக்கல்- வாங்கல்
பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி அனுகூலப்பலன்களை அடைவீர்கள். உங்களுக்குள்ள கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். இழுபறி நிலையில் உள்ள வம்பு வழக்குகளில் தடையின்றி வெற்றிக் கிட்டும். பல பெரிய மனிதர்களின் நட்புகள் நம்பிக்கை அளிப்பதாக அமையும். முன்ஜாமீன் கொடுப்பது வாக்குறுதிகள் கொடுப்பது போன்றவற்றால் ஆதாயங்களை அடைவீர்கள். 

அரசியல்
பெயர் புகழ் யாவும் உயரும். சமுதாயத்தில் நல்லதொரு இடத்தினைப் பிடிக்க முடியும். வரவேண்டிய வாய்ப்புகள், மாண்புமிகுப் பதவிகள் யாவும் கிட்டும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைப் பெறுவீர்கள். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். கட்சிப் பணிகளுக்காக வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று வரக் கூடிய யோகம் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கட்சி பணிகளுக்காக செலவு செய்வதில் தொய்வு ஏற்படாது. 

விவசாயிகள்
பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். அரசு வழியில் பல மானிய உதவிகள் கிடைக்கும். உழைப்பிற்கு ஏற்றப் பலன்களை அடைவதால் மனநிம்மதி உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் நிறைவான திருப்தி கிடைக்கும். பொருளாதார மேம்பாடுகளால் புதிய யுக்திகளை கையாண்டு மேலும் அபிவிருத்தியைப் பெருக்குவீர்கள். புதிய பூமி மனை வாங்கும் யோகம் உண்டாகும். கால்நடைகளால் எதிர்பார்த்த லாபத்தினை அடைவீர்கள்.

பெண்கள்
உடல் நிலை சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் செலவுகளை தாராளமாக செய்ய முடியும். ஆடை ஆபரணம் சேரும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். புத்திர பாக்கியம் அமையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். சொந்த வீடு வாகனங்களை வாங்கும் வாய்ப்பு அமையும்.

மாணவ- மாணவிகள்
மாணவ- மாணவிகள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சியடைய முடியும். விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளை பெற்று பாராட்டுதல்களை அடைவீர்கள். கல்விக்காக பயணங்களை மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பு உண்டாகும். வெளியூர், வெளிநாடுகளின் மூலம் அனுகூலம் கிட்டும். பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

மாதப்பலன்
சித்திரை 

ராசிக்கு 3-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தின் எல்லா தேவைகளும் பூர்த்தியாவதுடன் கடன்களும் சற்று குறையும். 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொண்டால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். செவ்வாய் 8-ல் இருப்பதால் பயணங்களில் சற்று கவனம் தேவை. தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும் வேலையாட்கள் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். நவீன பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. எதிலும் சிந்தித்து செயல்பட்டால் அனுகூலப்பலனை அடைய முடியும். விநாயகரை வழிபடவும்

வைகாசி 
ஜென்ம ராசிக்கு 2-ல் குரு 3-ல் சனி சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளையும் போட்டி பொறாமைகளையும் சமாளித்து முன்னேறுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் கடனில்லாத கன்னியமான வாழ்க்கை அமையும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். புத்திர வழியில் பூரிப்பும், கணவன்- மனைவியிடையே அன்யோன்யமும் அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பயணங்களில் கவனமாக இருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை அடைய முடியும். அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

ஆனி 
முயற்சி ஸ்தானமான 3-ல் சனி, கேது, 9-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களது செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். தொழில் வியாபார ரீதியாக வெளியூர் பயணங்கள் சென்று வரக்கூடிய வாய்ப்பு உண்டாகும். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களை பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெற்று மகிழ்ச்சி ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். அஷ்டலட்சுமி வழிபாடு செய்வது உத்தமம்.

ஆடி 
உங்கள் ராசிக்கு 10-ஆம் வீட்டில் -சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரீதியாக ஏற்றம் மிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் எல்லா வகையிலும் மேன்மை உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் தடையின்றி நிறைவேறும். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் நன்றாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் திறம்பட செயல்படுவார்கள். பணியில் நிம்மதியான நிலையிருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்களைக் குறைத்துக் கொள்ள முடியும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

ஆவணி 
ஜென்ம ராசிக்கு 11-ல் சூரியன் ஆட்சி பெற்று உடன் செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். 3-ல் சனி சஞ்சரிப்பது எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்களால் நல்ல செய்தி கிடைக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி நல்ல வரன்கள் தேடி வரும். கொடுத்த வாக்குறுதிகளைக் எளிதில் காப்பாற்ற முடியும். உணவு விஷயத்தில் கவனமுடன் இருந்தால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிட்டும். துர்க்கையம்மனை வழிபடவும்.

புரட்டாசி 
உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறுவதால் லாபங்கள் பெருகும். உத்தியோகஸ்தர்கள் நினைத்த இடமாற்றங்களையும் பதவி உயர்வுகளையும் பெறுவார்கள். பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். சூரியன், சுக்கிரன் 12-ல் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். வீண் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டு எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. விநாயகரை வழிபடவும்.

ஐப்பசி 
சூரியன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். 3-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் லாபங்கள் பெருகும். உடல் ஆரோக்கியத்தில் சுறுசுறுப்பும் உற்சாகமும் உண்டாகும். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் குறையும். பொன், பொருள் சேரும். இம்மாதம் 19-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு பெயர்ச்சியால் குரு 3-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைக்கும். சிவனை வழிபடுவது நற்பலனை தரும்.

கார்த்திகை 
ஜென்ம ராசியில் செவ்வாய், 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வதும் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. சனி, கேது 3-ல் சஞ்சாரம் செய்வதால் நீங்கள் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதால் பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகளும் விரிவடையும். தாராள தன வரவுகளால் பொன், பொருள் சேரும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் லாபகரமாக இருக்கும். சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் ஏற்படாது. அரசு வழியில் ஆதரவு கிடைக்கும். சிவ பெருமானை வழிபடுவது உத்தமம்.

மார்கழி 
ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், சனி, கேது சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றம் மிகுந்த பலன்களை பெறுவீர்கள். குடும்பத்திலும் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உற்றார் உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்பதால் புதிய வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்கும் நோக்கம் நிறைவேறும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். நினைத்த காரியங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும். புத்திர வழியில் மன நிறைவு தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.

தை 
உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய் 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். உடல் ஆரோக்கிய ரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. 3-ல் கேது சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து ஏற்றங்களை அடைவீர்கள். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும் என்றாலும் ஆடம்பரமாக செலவுகள் செய்வதை தவிர்க்கவும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப் பின் நற்பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.

மாசி 
உங்கள் ராசிக்கு குரு 3-ல் சஞ்சாரம் செய்வது பணவரவுகளில் நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்றாலும் 3-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதும் பஞ்சம ஸ்தானமான 5-ல் புதன் சஞ்சாரம் செய்வதும் எடுக்கும் முயற்சியில் அனுகூலத்தை தரும் அமைப்பாகும். எந்தவித பிரச்சினைகளையும் சமாளித்து ஏற்றத்தை அடைவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த கடன்களை வசூலிக்க சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். மற்றவர்களை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை பலப்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபாடு செய்யவும்.

பங்குனி 
ராசியாதிபதி சுக்கிரன் 7-ல் சஞ்சரிப்பதும் மாத கோளான சூரியன் இம்மாதம் 6-ல் சஞ்சரிப்பதும் சகல விதத்திலும் அனுகூலத்தை தரும் அமைப்பாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். பொருளாதார நிலை மேன்மையடையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெற முடியும். சிலருக்கு இடமாற்றங்களும் கிடைக்கும். கடன்கள் படிப்படியாக குறைவதால் சேமிப்பும் பெருகும். அசையும் அசையா சொத்துகள் சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். செல்வம் செல்வாக்கு மேம்படும். குருபகவானை வழிபடுவது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை,
எண் - 5,6,7,8
நிறம் - வெள்ளை, பச்சை,
கிழமை - வெள்ளி, புதன்,
திசை - தென் கிழக்கு,
கல் - வைரம்
தெய்வம் - லட்சுமி

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு