இந்தியா-இராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆறாவது முறையாக விளக்க மறியல் நீடிப்பு..

ஆசிரியர் - Editor I
இந்தியா-இராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆறாவது முறையாக விளக்க மறியல் நீடிப்பு..

கடந்த ஜனவரி 13ஆம் திகதி எல்லை தாண்டி மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகு விபத்துக்குள்ளான எட்டு இராமேஸ்வரம் மீனவர்களையும் வரும் மார்ச் மாதம் 27ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு  ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிபதி ஏ.ஜூட்சன் உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் சிறையில் உள்ள 11ஆம் வகுப்பு படிக்கும் ஷாம் டேனியல் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர் துரைபாண்டி  இருவரது கல்வியை கருத்தில் கொண்டு, அவர்களை விடுவிக்க வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற  வேலை நிறுத்தப்போராட்டர்தில் ஈடுபட்டு  வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு