இன்றைய நாள் எப்படி – 14 பெப்ரவரி 2019 வியாழக்கிழமை

ஆசிரியர் - Admin
இன்றைய நாள் எப்படி – 14 பெப்ரவரி 2019 வியாழக்கிழமை

இன்றைய பஞ்சாங்கம்

14-02-2019, மாசி 02, வியாழக்கிழமை, நவமி திதி பகல் 02.54 வரை பின்பு வளர்பிறை தசமி.

ரோகிணி நட்சத்திரம் இரவு 10.01 வரை பின்பு மிருகசீரிஷம்.

நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2.

சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30,

குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,

மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

மேஷம்
இன்று தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சலும் உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும்.
முன்கோபத்தால் வேலையில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
விட்டு கொடுத்து செல்வது நல்லது. நண்பர்களால் ஆதாயம் கிட்டும்.
எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

ரிஷபம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.
பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.
பொன் பொருள் சேரும்.
புதிய கூட்டாளி சேர்க்கையால் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள்.

மிதுனம்
இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம்.
உத்தியோகத்தில் சக ஊழியர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க கூடும்.
உடன்பிறந்தவர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும்.
தொழில் ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
கடன்கள் ஓரளவு குறையும்.

கடகம்
இன்று காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும்.
உங்கள் பிரச்சினைகள் தீர உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.
திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும்.
வியாபாரம் சிறப்பாக இருக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் வழியாக நல்லது நடக்கும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் வெளிவட்டார நட்பு ஏற்படும்.  உடல்நிலை சீராகும். உத்தியோகத்தில் எதிரிகளின் தொல்லைகள் குறையும். பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும்.

கன்னி
இன்று விலை உயர்ந்த பொருள் வாங்குவதில் அதிக கவனம் தேவை.
உறவினர்களின் வருகையால் சந்தோஷம் ஏற்பட்டாலும் நிதானத்துடன் பழகுவது நல்லது.
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.
மறைமுக எதிர்ப்புகள் நீங்கும்.
சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

துலாம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் தடை தாமதங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும்.  வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது உத்தமம். சுப காரிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம்
இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்துடன் செயல்படுவார்கள்.
பிள்ளைகள் பெற்றோரின் நன்மதிப்பை பெறுவார்கள்.
பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் கடன் பிரச்சினை தீரும்.
சொத்து சம்பந்தபட்ட வழக்குகளில் வெற்றி வாய்ப்புகள் கிட்டும்.
புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.

தனுசு
இன்று குடும்பத்தில் திடீர் தனவரவு உண்டாகும்.
புத்திர வழியில் நல்ல செய்தி கிடைக்கும்.
வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.
சுபகாரியங்கள் கைகூடும்.
சிலருக்கு மேற்படிப்பிற்காக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும்.
நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும்.

மகரம்
இன்று குடும்பத்தில் பெரியவர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும்.
மாணவர்களுக்கு படிப்பில் சற்று ஆர்வம் குறையும்.
உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
வெளியூர் பயணங்களால் சாதகமான பலன்கள் உண்டாகும்.
முன்கோபத்தை குறைப்பது நல்லது.

கும்பம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும்.  நண்பர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பு மன நிம்மதியை தரும்.

மீனம்
இன்று பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.
புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.
சுபசெலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.
தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும்.
புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு