மீனவரின் உடல் சொந்த ஊரில் உறவினர்கள் கண்ணீருடன் தகனம் இலங்கை கடற்படை மீது வழக்கு பதிவு செய்ய உறவினர் கோரிக்கை..

ஆசிரியர் - Editor I
மீனவரின் உடல் சொந்த ஊரில் உறவினர்கள் கண்ணீருடன் தகனம் இலங்கை கடற்படை மீது வழக்கு பதிவு செய்ய உறவினர் கோரிக்கை..

இலங்கை இராணுவ கப்பல் மோதியதில் , படகில் இருந்து கடலுக்குள் தவறிவிழுந்த , மீனவர் முனுசாமி பாலியானார்.அவரது உடல் அவரது சொந்த ஊரான எலந்தைகூட்டம் கிராமத்தில் உறவினர்கள் கண்ணீர் மல்க தகனம்  செய்தனர்..

இறந்த மீனவருடன் மீன்பிடிக்க சென்று இலங்கை சிறையில் உள்ள மூன்று மீனவர்களிடம் விசாரணை செய்து இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதி மீனவர் உயிர்யிழந்தார் என உறுதி செய்யும் பட்சத்தில் இலங்கை கடற்படை மீது வழங்கு பதிவு செய்து 

கடற்படை அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். இறந்த மீனவரின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் உதவி தொகையாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு