இலங்கை கடற்பகுதியில் கைதான இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்..

ஆசிரியர் - Editor I
இலங்கை கடற்பகுதியில் கைதான இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்..

காங்கேசன்துறை பொலிசாரினால் ஊர்காவற்துறை நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட எட்டு மீனவர்களையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். 

நெடுந்தீவு கடற்பரப்பில் படகு விபத்துக்கு உள்ளாகி கடலில் தத்தளித்த மீனவர்களை தாம் காப்பற்றியதாக காங்கேசன்துறை கடற்படையினர், காங்கேசன்துறை பொலிசாரிடம் ஞாயிற்றுக்கிழமை மாலை எட்டு மீனவர்களை ஒப்படைத்தனர். 

அவர்களை இன்றைய தினம் திங்கட்கிழமை காங்கேசன்துறை பொலிசார் ஊர்காவற்துறை நீதிவான் முன்னிலையில் முற்படுத்தினார்கள். அதன் போது குறித்த எட்டு மீனவர்களையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். 

அதேவேளை குறித்த மீனவர்களுடன் வந்திருந்த இராமநாதபுரத்தை சேர்ந்த கருப்பையா மாரிசாமி எனும் மீனவர் உயிரிழந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சடலமாக ஒப்படைக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு