இலங்கையை அச்சுறுத்தும் புதியவகை நோய்.. சுகாதார அமைச்சின் குழு நாளை முல்லைத்தீவுக்கு வருகிறது..

ஆசிரியர் - Editor I
இலங்கையை அச்சுறுத்தும் புதியவகை நோய்.. சுகாதார அமைச்சின் குழு நாளை முல்லைத்தீவுக்கு வருகிறது..

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு நாயில் இனம் கானப்பட்டதான ட்றைபனசோமா என்னும் நோயின் தாக்கம் தொடர்பில் ஆய்வுகள் மூலம் கண்டறியும் நோக்கில் மத்திய சுகாதார கால்நடை அமைச்சின் விசேட நிபுணர்கள் அடங்கிய குழுவினர் 

நாளைய தினம் முல்லைத்தீவிற்கு வருகை தருவதாக முல்லைத்தீவு மாவட்ட கால்நடை வைத்திய அதிகாரி கௌரி திலக ன் தெரிவித்தார்.

இலங்­கை­யில் பெரும் ஆபத்தை ஏற்­ப­டுத்­தக் கூடிய புதிய வகை நோய் ஒன்று முல்லைத்தீவில்  நாய்­க­ளில் அடை­யா­ளங் காணப்­பட்­டுள்ளதாகவும்  இந்­த­நோய் மனி­தர்­க­ளுக்­கும் பரவ வாய்ப்­புள்­ள­தாக பேரா­த­னைப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் கால்­

நடை பேரா­சி­ரி­யர் அஷோக் தங்­கொல்ல  எச்­ச­ரித்திருந்தார். இது தொடர்பில் கேட்டபோதே மேற்கண்டவாறு பதிலளித்தார்.

இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட கால்நடை வைத்திய அதிகாரி மேலும் விபரம் தெரிவிக்கையில்,

தெற்கில் பலாங்­கொடை மற்­றும் முல்­லைத்­தீ­விலும் குறித்த ட்றைப­ன­சோம என்று சந்தேகிக்கப்படும்  நோய்  நாய்­க­ளில் அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ளதாகவும் . இந்த நோய் மனி­தர்­க­ளுக்­கும் தொற்­றும் அபா­யம் உள்­ள­தா­கம் கூறப்பட்டது. 

அவ்வாறு இனம்காணப்பட்ட நாயானது முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய்ப் பிரதேசத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வாறு குறித்த நோய் தாக்கம் உள்ளதாக சந்தேகிக்கப்படும் நாய் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு அதன் இரத்த மாதிரியும் ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இரத்த ஆய்வு அறிக்கை கிடைக்கப்பெற்ற பின்பே நூறு வீதமாக உறுதி செய்ய முடியும். இருப்பினும் குறித்த தாக்கம் தொடர்பில் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக மத்திய அமைச்சிற்கு அறிவிக்கப்பட்டது. அதனை அடுத்து இது 

தொடர்பான நிபுணத்துவம் கொண்ட வைத்தியர்கள் உள்ளிட்ட குழுவினர் நாளை திங்கட் கிழமை முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகை தருகின்றனர். இதன்போது குறித்த நாயை பரிசோதனைக்கு உட்படுத்துவர். 

அதேநேரம் குறித்த நாயில் இந் நோய்த் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அதனை அண்டிய பகுதிகளில் காணப்படும் நாய்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். இதேநேரம் மேற்படி நோய் தாக்கம் இதுவரை எந்த மனிதரிலும் இனம் கானப்படவில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. 

இதேநேரம் ட்றைப­ன­சோம என்ற நோய் நாய்கள் மூலம்   பரவ ஒரு வகை இலை­யான் முக்­கிய காரணி என்று தெரி­விக்­கப்­படுகின்றது .

இலங்­கை­யில் இது­வ­ரை­யில் அந்­த­வகை இலை­யான் பதி­வா­க­வில்லை. என்றும் கூறப்படுகின்றது.  குலெக்ஸ் என்ற நுளம்பு மற்­றும் இர­வில் மாத்­தி­ரம் வெளியே வரும் கிஸ்­ஸிங் பக் என்ற நுளம்­பால் இந்த நோய் பர­வி­யி­ருக்­க­லாம் என்று சந்­தே­கிக்­கப்­ப­டு­வ­தாக இவ்வாறான செயல்பாடுகளிற்கு சுகாதாரத் திணைக்களத்தின் உதவியும் நாடப்படும் என்றார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு