ஒரு இரவில் 20 இந்திய மீனவர்கள் கைது, கடற்படை படகு மோதி ஒரு இந்திய படகு சேதம்..

ஆசிரியர் - Editor I
ஒரு இரவில் 20 இந்திய மீனவர்கள் கைது, கடற்படை படகு மோதி ஒரு இந்திய படகு சேதம்..

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 20 இந்திய மீனவர்கள் நேற்று இரவு மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தமைக்காக இலங்கை கடற்படையினால் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

குறிப்பாக நெடுந்தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 9 இந்திய மீனவர்களும், பூநகரி- கிராஞ்சி கடற்ப குதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 11 மீனவர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் தமிழகம்- இராமேஸ்வரம் பகுதி மீனவர்களுடைய படகு மீது இலங்கை கடற்படையின் படகு மோதியதில் ஆபத்தான நிலையில் அந்த படகு தமிழகம் திரும்பியுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு