கும்பகோணத்தில் டெல்லி பெண் ஊழியரை கற்பழித்த 4 வாலிபர்கள் கைது

ஆசிரியர் - Admin
கும்பகோணத்தில் டெல்லி பெண் ஊழியரை கற்பழித்த 4 வாலிபர்கள் கைது

திருச்சி: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு வங்கி உயர் அதிகாரி பயிற்சிக்காக வந்த டெல்லியை சேர்ந்த இளம்பெண்ணை கடந்த 5-ந்தேதி இரவு கஞ்சா மற்றும் குடிபோதையில் 4 வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர். பெற்றோர்களே, அந்த 4 பேரையும் வெளியே விடுங்கள், நாங்கள் கொன்று விடுகிறோம் என்று கூறுமளவிற்கு நடந்த இந்த கொடூர சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் திருச்சியில் மற்றொரு பாலியல் பலாத்கார சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம், யாத்திரி நிவாஸ் பகுதியைச் சேர்ந்த 13 வயது நிரம்பிய சிறுமி நேற்று மாலை அங்கு உள்ள காவிரி ஆற்றுக்கு குளிக்க சென்றார். அவருடன் 18 வயது தோழியும் சென்றார். தற்போது பெய்து வரும் தொடர் மழையால் ஆற்றில் குறைந்த அளவே தண்ணீர் ஓடினாலும் நிறைந்த மனதுடன் அவர்கள் ஆற்றில் இறங்கி குளித்துக்கொண்டு இருந்தனர்.

அதே சமயம் ஆற்றில் தண்ணீர் ஓடாமல் மணல் திட்டாக இருக்கும் இடத்தில் 4 வாலிபர்கள் ஒன்றாக அமர்ந்து மது குடித்துக் கொண்டு இருந்தனர். தலைக் கேறிய போதையில் தங்களை மறந்த வாலிபர்களின் பார்வை ஆற்றில் குளித்த சிறுமி மற்றும் அவரது தோழி மீது பட்டது.

காலியான மது பாட்டில்களை தூக்கி எறிந்துவிட்டு சிறுமிகள் குளிக்கும் இடத்திற்கு வந்தனர். போதையுடன் காமமும் தலைக்கேறிய அவர்கள் குளித்துக்கொண்டு இருந்தவர்களின் கைகளை பிடித்து இழுத்து பலாத்காரம் செய்ய முயன்றனர். அப்போது சிறுமியின் தோழி அந்த கும்பலிடம் இருந்து தப்பினார். ஆனால் 13 வயது சிறுமியால் அந்த காம கொடூர வாலிபர்களிடம் இருந்து தப்ப முடியவில்லை. தொடர்ந்து அவர்கள் மறைவான இடத்திற்கு சிறுமியை தூக்கிச்சென்று பலாத்காரம் செய்துள்ளனர்.

இதற்கிடையே அந்த கும்பலிடம் இருந்து தப்பிய சிறுமியின் தோழி, ஊருக்குள் சென்று அந்த வாலிபர்கள் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்வது குறித்து கூறி காப்பாற்றும் படி கதறினார். உடனே பொதுமக்கள் அங்கு சென்று இளைஞர்களிடம் இருந்து சிறுமியை மீட்டனர். அப்போது 2 வாலிபர்கள் அவர்களிடம் இருந்து தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட வாலிபர்கள் அதே பகுதியைச் சேர்ந்த பாலு மற்றும் மகேஷ் என தெரியவந்தது.

பாதிக்கப்பட்ட சிறுமியை போலீசார் பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இன்று அந்த சிறுமிக்கு பரிசோதனை நடக்கிறது. பிடிபட்ட வாலிபர்கள் 2 பேரிடமும் ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் ரவிச்சந்திரன். இன்ஸ்பெக்டர்கள் உமா சங்கர், மும்தாஜ் ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது 2 பேர் மட்டுமே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், மற்ற 2 பேர் யாரும் வருகிறார்களா என புதருக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்ததாகவும் கூறினர். அந்த 2 பேர் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே வாலிபர்களிடம் இருந்து தப்பித்த சிறுமியின் தோழியிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். அப்போது மேலும் இதில்அதிரடி தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு