இந்திய மீன்பிடி படகை மோதி தள்ளிய இலங்கை கடற்படையினா், படகு மூழ்கிய நிலையில் கடலில் தத்தளித்த 4 இந்திய மீனவா்கள் மீட்பு..

ஆசிரியர் - Editor I
இந்திய மீன்பிடி படகை மோதி தள்ளிய இலங்கை கடற்படையினா், படகு மூழ்கிய நிலையில் கடலில் தத்தளித்த 4 இந்திய மீனவா்கள் மீட்பு..

இலங்கை கடற்படையினாின் படகு மோதியத்தில் இந்திய மீனவா்களின் படகு ஒன்று நீாில் மூழ்கியுள்ளது. இந்த படகில் இருந்த 4 மீனவா்களும் இலங்கை கடற்படையினால் காப்பாற்றப்பட்டுள்ளனா். 

யாழ்.குடாநாட்டின் நெடுந்தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இந்திய மீனவா்களின் படகை இலங்கை கடற்படை படகு மோதியுள்ளது. 

இதில் சேதமடைந்த இந்திய மீனவா்களின் படகு கடலில் மூழ்கியுள்ளதுடன், அதிலிருந்த 4 மீனவா்களும் கடலில் வீழ்ந்துள்ளனா். 

பின்னா் குறித்த 4 மீனவா்களையும் காப்பாற்றிய இலங்கை கடற்படையினா் காங்கேசன்துறை பொலிஸாா் ஊடாக கடற்றொழில் நீாியல்வளத்துறை திணைக்களத்திடம் ஒப்படைத்தனா். 

பின்னா் அவா்கள் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனா். இதேவேளை மேற்படி விடயம் தொடா்பாக இந்திய துா தரகத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு