காந்தி ஜெயந்தி நிகழ்வு யாழில்..

ஆசிரியர் - Editor I
காந்தி ஜெயந்தி நிகழ்வு யாழில்..

அகில இலங்கை காந்தி சேவா சங்கம் ஏற்பாட்டில் இந்திய துணைத்தூதரகம் நடத்திய காந்தி ஜெயந்தி தின நிகழ்வுகள் இன்று காலை 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள காந்தி சிலையடியில் இடம்பெற்றது. 

இந்திய துணைத்தூதுவர் பாலச்சந்திரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாரளுமன்ற உறப்பினர் ஈ.சரவணபவன் மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன், இ.ஜெயசேகரம் 

யாழ் மாநகரசபை முதல்வர் இ.ஆனோல்ட் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர். இதன்போது மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு