102 வயதில் ஓடி தங்கம் வாங்கிய பஞ்சாப் வீராங்கனைக்கு குவியும் வாழ்த்துக்கள்:

ஆசிரியர் - Admin
102 வயதில் ஓடி தங்கம் வாங்கிய பஞ்சாப் வீராங்கனைக்கு குவியும் வாழ்த்துக்கள்:

ஸ்பெயின் நாட்டின் மலாகா நகரில் நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் தடகளப் போட்டியில் (World Masters Athletics ) 100-104 வயது பிரிவினருக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு ஓடி தங்கப்பதக்கம் வென்றுள்ளார் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவைச் சேர்ந்த கவுர். 102 வயதான இவர் இதுவரை 5 முறை உலக மாஸ்டர்ஸ் தடகளப் போட்டியில் கலந்துகொண்டுள்ளார்.

கடந்த முறை இவர் கலந்துகொண்ட 100 மீட்டர் ஓட்டத்தின் மூலம் நூறு வயதானவர்களில் மிகவும் வேகமாக ஓடக்கூடியவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ள இந்த வயதான வீராங்கனை குரு தேவ் என்ற தன் 78 வயதான மகன் அளித்த ஊக்கத்தினால் இந்த வெற்றி பெற்றதாக கூறியுள்ளார்.

மேலும் இவர் 93 வயதில் அவரது தடகள வாழ்க்கையைத் ஆரம்பித்தவர் தற்போது 102 வயது ஆகியும் தடகளப் போட்டியில் கலந்து கொண்டு கலக்கி வருகிறார். கவுரின் மகன் குரு தேவும் முதியவர்களுக்கான ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டுள்ளார். இப்போது வரை தனது தாய்க்கு எந்தவித உடல் பாதிப்புகளும் இல்லை . ‘முதல் முறையாக என் தாய் ஓடத் தொடங்கும்போது 100 மீட்டரை ஒரு நிமிடம் எட்டு விநாடிகளில் கடந்தார்.

தங்கம் வெல்வது கவுருக்கு இது முதல் முறையல்ல. கடந்த வருடம் நியூசிலாந்தில் நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் தடகளத்தில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் இவர் தங்கம் வென்றுள்ளார் என குருதேவ் தெரிவித்துள்ளார். 102 வயதில் இந்தியாவிற்கு தங்கம் வாங்கி பெருமை சேர்த்த தங்க மங்கைக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு