ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து நாடு திரும்பிய திருமுருகன் கைது

ஆசிரியர் - Admin
ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து நாடு திரும்பிய திருமுருகன் கைது

ஐக்கிய நாடுகள் சபையில் உரை நிகழ்த்திவிட்டு நாடு திரும்பிய மே 17 இயக்கம் ஒருங்கிணைப்பாளா் திருமுருகன் காந்தியை பெங்களூரு விமான நிலையத்தில் காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின் போது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பாக மே 17 இயக்கம் ஒருங்கிணைப்பாளா் திருமுருகன் காந்தி ஐக்கிய நாடுகள் சபையில் உரை நிகழ்த்தினாா். இதனைத் தொடா்ந்து இன்று அவா் நாடு திரும்பினாா். இந்நிலையில் பெங்களூரு விமான நிலையத்தில் அவா் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இது தொடா்பாக மே 17 இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருமுருகன் காந்தி தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் பதிவு செய்துவிட்டு திரும்பிய போதுஇ பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளார். வரும் ஞாயிறு அன்று பெங்களூரில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காரணத்தினால் பெங்களூர் விமான நிலையத்தில் இன்று காலை வந்து இறங்கினார்.

இந்நிலையில் தூத்துக்குடி படுகொலையை ஐ.நா.வில் பேசியதற்காக பழைய போராட்ட வழக்குகளை காரணம் காட்டி திருமுருகன் காந்தியை பெங்களூரில் கைது செய்துள்ளனர். பாஜக அரசு மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அரசின் இந்த அடக்குமுறையினை வன்மையாக கண்டிப்போம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

திருமுருகன் காந்தி மீது தேச துரோக வழக்கு நிலுவையில் உள்ளதால் அவரை எந்த விமான நிலையம் வந்தாலும் அவரை கைது செய்யலாம் என்று லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக கைது செய்த காவல் துறையினா் தொிவித்துள்ளனா்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு