SuperTopAds

யாழில். இரண்டு மாத குழந்தை உயிரிழப்பு

ஆசிரியர் - Editor II
யாழில். இரண்டு மாத குழந்தை உயிரிழப்பு

துன்னாலையில் இரண்டு மாதங்கள் நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

துன்னாலை மேற்கு, கரவெட்டியைச் சேர்ந்த எட்வேட் தனுசன் டெரித் என்ற குழந்தையே நேற்றைய தினம் இவ்வாறு உயிரிழந்துள்ளது.

கடந்த 22ஆம் திகதி குழந்தைக்கு சளியுடன் கூடிய இருமல் ஏற்பட்டது.

இந்நிலையில் மந்திகை வைத்தியசாலைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக 24ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் குழந்தை உயிரிழந்துள்ளது.