தாகத்திற்கு தண்ணீர் கேட்ட இளைஞர்: மனைவி கண் முன்னே குத்தி கொலை செய்த நண்பர்

ஆசிரியர் - Editor II
தாகத்திற்கு தண்ணீர் கேட்ட இளைஞர்: மனைவி கண் முன்னே குத்தி கொலை செய்த நண்பர்

இந்திய தலைநகர் டெல்லியில் தாகத்திற்கு தண்ணீர் கேட்ட இளைஞரை அவரது நண்பர் மனைவி கண் முன்னே கொடூரமாக குத்தி கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடமேற்கு டெல்லியில் உள்ள பாரத் நகரில் குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜஹாங்கிர்புரி பகுதியில் குடியிருக்கும் சாகர் என்ற 20 வயது இளைஞர் தமது மனைவியை அழைத்துக் கொண்டு கடந்த 11 ஆம் திகதி இரவு காலார நடந்து வரலாம் என சென்றுள்ளார்.

கோடை காலமானதால் சாகருக்கு தண்ணீர் தாகம் எடுத்துள்ளது. நள்ளிரவு நேரம் என்பதால் அவர்கள் சென்ற பாதையில் எந்த கடையும் திறந்திருக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜெ ஜெ காலனி அருகே சாகரின் குழந்தை பருவ நண்பர் கவுரவ் குடியிருப்பதை அறிந்து அங்கு சென்றுள்ளனர்.

நண்பரை சந்தித்து ஒரு கிண்ணம் குளிர்ந்த நீர் கிடைக்குமா என கேட்டுள்ளார் சாகர். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த அவர் தண்ணீர் தர முடியாது எனவும் துரத்தியுள்ளார். இதில் நண்பர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சமநிலையை இழந்த கவுரவ் சமையலறை சென்று கத்தியை எடுத்து சாகரை சரமாரியாக தாக்கியுள்ளார்.

மேலும், இந்த பகுதி தானே உனக்கு இந்த நள்ளிரவில் தாகம் எடுத்தது என அலறிக்கொண்டே கழுத்தில் கத்தியை ஆழமாக இறக்கியுள்ளார்.

இச்சம்பவத்தை கண்டு பயத்தில் அலறிய சாகரின் மனைவி அங்கிருந்து வெளியேறி பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

பொலிசார் விரைந்து சென்று குற்றுயிராக கிடந்த சாகரை மீட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சாகர் மரணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே தலைமறைவான கவுரவை பொலிசார் கைது செய்துள்ளனர். மட்டுமின்றி முன்விரோதம் காரணமாகவே தமது நண்பரை கொலை செய்ததாகவும் அவர் பொலிசில் ஒப்புக்கொண்டுள்ளார்.

இச்சம்பவம் சாகரின் பெற்றோரை நிலைகுலைய செய்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு