யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற பேருந்தின் சக்கரத்திற்குள் விழுந்த நபர் உயிரிழப்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற பேருந்தின் சக்கரத்திற்குள் விழுந்த நபர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பேருந்து மோதியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில், இயக்கச்சி பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வீதியில் மதுபோதையில் நடந்து சென்ற நபர்  வீதியின் குறுக்கே வந்து பேருந்தினை வழிமறித்துள்ளார்.

வீதியை விட்டு விலகுமாறு சாரதியும் நடத்துனரும் பேசி விட்டு  பேருந்தினை எடுத்தபோது மீள அவர் பேருந்தின் குறுக்கே பாயந்த நிலையில், பேருந்தின் சில்லுக்குள் அகப்பட்டு சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

பொதுத் தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்வது. தி. திபாகரன், M.A.

மேலும் சங்கதிக்கு