குடும்ப பிரச்சனையை தீர்க்க சென்ற பெண்ணை பலாத்காரம் செய்த பாதிரியார்…!

ஆசிரியர் - Editor II
குடும்ப பிரச்சனையை தீர்க்க சென்ற பெண்ணை பலாத்காரம் செய்த பாதிரியார்…!

கேரளாவின் பத்தினம் திட்டா மாவட்டத்தில் உள்ள மலங்கரா மரபுவழி திருச்சபையில் பாவ மன்னிப்பு கேட்க வந்த ஒரு பெண்ணை கற்பழித்ததாக 4 பாதிரியார்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆலப்புழை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இதே திருச்சபையில் தற்போது பணியாற்றி வரும் ஒரு பாதிரியார் மீது தற்போது பாலியல் புகார் தெரிவித்து உள்ளார். இந்த பாதிரியார் 4 ஆண்டுக்கு முன்பு ஆலப்புழை மாவட்டத்தின் கொய்பள்ளி கரன்மா என்னும் இடத்தில் பணிபுரிந்தவர் ஆவார்.

இதுபற்றி போலீசார் கூறுகையில், “குடும்ப பிரச்சினையை தீர்த்து வைக்கும்படி பாதிக்கப்பட்ட பெண் பினு ஜார்ஜ் என்ற பாதிரியாரின் அலுவலகத்துக்கு சென்றபோது அவரை பாதிரியார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து, திருச்சபை நிர்வாகிகளிடம் அந்த பெண் உடனடியாக புகார் செய்தார். அப்போது அவரிடம் எதிர்காலத்தில் உங்களுக்கு எந்த தொல்லையும் பாதிரியாரிடம் இருந்து வராது என்று உறுதி அளித்துள்ளனர். ஆனால் தனக்கு தொல்லை கொடுத்ததுடன் பாதிரியார் தொடர்ந்து வதந்திகளை பரப்பி வந்ததால் தற்போது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசை அவர் நாடி இருக்கிறார்” என்று தெரிவித்தனர்.

பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.-

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு