யாழ்.நெல்லியடியில் கஞ்சா வியாபாரி கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.நெல்லியடியில் கஞ்சா வியாபாரி கைது!

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் நீண்ட காலமாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர், நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த வியாழக்கிழமை (13) கஞ்சாவை விற்பனைக்காக எடுத்து சென்ற போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட இளைஞன் வடமராட்சி கற்கோவளம் பகுதியை சேர்ந்தவர் என்பதுடன் இவர் நீண்ட நாட்களாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். 

கைது செய்யப்பட்ட இளைஞனிடமிருந்து 2 கிலோ 300 கிராம் கஞ்சா நெல்லியடி பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதானவர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு