யாழ்.அனலைதீவிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற இருவரை காணவில்லை..

ஆசிரியர் - Editor I
யாழ்.அனலைதீவிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற இருவரை காணவில்லை..

அனலைதீவில் இருந்து நேற்றையதினம் (ஜூன்10) மாலை 5 மணியளவில் கடற்தொழிலுக்கு சென்ற இருவரைக் காணவில்லை என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். 

 அனலைதீவைச் சேரந்த திருச்செல்வம் மைக்கல் பெனாண்டோ,நாகலிங்கம் விஜயகுமார் என்ற இருவரும் இதுவரை கரை திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவர்களை உறவினர்களும் , ஊர்மக்களும் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளபோதும் இதுவரை எந்த தகலும் கிடைக்கவில்லை என தெரியவருகின்றது. 

இவர்கள் தொடர்பான தகவல்கள் கிடைக்கப் பெற்றால் தொடர்பு கொள்ளுமாறு குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். தொடர்புகளுக்கு; 0772024639/ 0764215429/ 0772896716

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு