மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணின் கைப் பை லொறியில் சிக்கியதால் சில்லுக்குள் விழுந்த பெண் பரிதாப பலி...

ஆசிரியர் - Editor I
மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணின் கைப் பை லொறியில் சிக்கியதால் சில்லுக்குள் விழுந்த பெண் பரிதாப பலி...

நிட்டம்புவ, வத்துபிட்டிவல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவரின் கைப்பை லொறியில் சிக்கியதால் லொறியில் மோதிப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லொறியில் கைப்பை சிக்கியதில் மோட்டார் சைக்கிளில் இருந்து வீழ்ந்த பெண் அதே லொறியால் மோதப்பட்ட்டே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (19) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த பெண் 54 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு