யாழ்.புங்குடுதீவில் இருந்து கள்ளமாடு கடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 3 பேர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.புங்குடுதீவில் இருந்து கள்ளமாடு கடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 3 பேர் கைது!

யாழ்ப்பாணம் - புங்குடுதீவு பிரதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இறைச்சிக்காக மாடுகளை கடத்தி வந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் உட்பட மூவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புங்குடுதீவிலிருந்து மண்டைதீவு நோக்கி சட்ட விரோதமாக மாடுகள் கடத்தப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய சுற்றி வளைப்பின்போது மேற்படி பொலிஸ் உத்தியோகஸ்தர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் கடத்திச் செல்லப்பட்ட எட்டு மாடுகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகஸ்த்தர் தற்போதும் யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்தில் குற்ற விசாரணை பிரிவில் கடமையாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவம் தொடர்பாக ஊர் காவல்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு