யாழ்.வலி,வடக்கு உயர் பாதுகாப்பு வலத்திலிருந்து சுமார் 33 வருடங்களின் பின் விடுவிக்கப்படும் 67 ஏக்கர் நிலம்...

ஆசிரியர் - Editor I
யாழ்.வலி,வடக்கு உயர் பாதுகாப்பு வலத்திலிருந்து சுமார் 33 வருடங்களின் பின் விடுவிக்கப்படும் 67 ஏக்கர் நிலம்...

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் கடந்த 33 வருட காலமாக இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த சுமார் 67 ஏக்கர் காணி நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்பட்டவுள்ளது. 

காங்கேசன்துறை தெற்கு , 235 கிராம சேவையாளர் பிரிவில் 20.3 ஏக்கர் காணிகளும் , வறுத்தலைவிளான் 241 கிராம சேவையாளர் பிரிவில் 23 ஏக்கர் காணிகளும் , மயிலிட்டி தெற்கு (தென்மயிலை) 240 கிராம சேவையாளர் பிரிவில் 24 ஏக்கர் காணிகளும் விடுவிக்கப்படவுள்ளது. 

விடுவிக்கப்படவுள்ள காணி உரிமையாளர்களுக்கு, அப்பகுதி கிராம சேவையாளர்களால் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு