யாழ்.தென்மராட்சியில் 107 வயது நபர் உயிரிழப்பு! 10 பிள்ளைகளும், 75 பேரப்பிள்ளைகளும், 25 பூட்டப்பிள்ளைகளும், 5 கொள்ளுப் பேரப்பிள்ளைகளும் கண்ட மனிதன்..

ஆசிரியர் - Editor I
யாழ்.தென்மராட்சியில் 107 வயது நபர் உயிரிழப்பு! 10 பிள்ளைகளும், 75 பேரப்பிள்ளைகளும், 25 பூட்டப்பிள்ளைகளும், 5 கொள்ளுப் பேரப்பிள்ளைகளும் கண்ட மனிதன்..

யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் 107 வயது முதியவர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (07) சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். 

சாவகச்சேரி உதயசூரியன் பகுதியினைச் சேர்ந்த பூச்சி வேலுமுத்து என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.1917ஆம் ஆண்டு இவர் பிறந்துள்ளார். 

இவர் தனது 107 வயது பிறந்தநாளை அண்மையில் வெகுவிமர்சியாக கொண்டாடியிருந்தார். இவருக்கு 10 பிள்ளைகள், 75 பேரப்பிள்ளைகள், 

25 பூட்டப்பிள்ளைகள் 5 கொள்ளுப் பேரப் பிள்ளைகள் உள்ளனர்.கடந்த 1 மாத காலமாக சுகயீனமுற்ற நிலையில் உயிரிழந்துள்ளார். 

 இலங்கையில் ஆங்கிலேயர் ஆண்ட காலப்பகுதியில் இவர் பணிபுரிந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு