யாழ்.நீர்வேலியில் இன்று அதிகாலை நடந்த கோர விபத்து, யாழ்.பல்கலைகழக 1ம் வருட மாணவன் உயிரிழப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.நீர்வேலியில் இன்று அதிகாலை நடந்த கோர விபத்து, யாழ்.பல்கலைகழக 1ம் வருட மாணவன் உயிரிழப்பு..

யாழ்.நீர்வேலி பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் யாழ்.பல்கலைகழக 1ம் வருட கலைப்பிரிவு மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மானிப்பாய் - பேம்படி பகுதியை சேர்ந்த ரமேஷ் சகீந்தன் (வயது 22) என்ற மாணவனே விபத்தில் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை தனது வீட்டிலிருந்து நீர்வேலி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது வீதியின் குறுக்கே பாய்ந்த நாயுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் காயமடைந்த மாணவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு