யாழ்.அல்லைப்பிட்டியில் பேருந்தில் இருந்து இறங்கியபோது தவறி விழுந்த பெண் உயிரிழப்பு...

ஆசிரியர் - Editor I
யாழ்.அல்லைப்பிட்டியில் பேருந்தில் இருந்து இறங்கியபோது தவறி விழுந்த பெண் உயிரிழப்பு...

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். 

மண்கும்பான் 4ஆம் வட்டாரம் பகுதியை சேர்ந்ததங்கரத்தினம் தனஸ்வரி (வயது 46) என்பவரே உயிரிழந்துள்ளார். 

குறித்த பெண் பேருந்தில் இறங்க முற்பட்ட வேளை பேருந்தின் சாரதி பேருந்தை நகர்த்தியமையால் , தவறி விழுந்துள்ளார். 

அதில் படுகாயமடைந்தவரை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு