வட்டுக்கோட்டை இளைஞன் உயிரிழந்த விவகாரத்தில் மரண விசாரணை தொடர்பான கட்டளை ஐனவரி 2ம் திகதி...

ஆசிரியர் - Editor I
வட்டுக்கோட்டை இளைஞன் உயிரிழந்த விவகாரத்தில் மரண விசாரணை தொடர்பான கட்டளை ஐனவரி 2ம் திகதி...

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கில் மரண விசாரணை தொடர்பான கட்டளை எதிர்வரும் ஜனவரி 2ம் திகதி வழங்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம்  வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது

இறந்த நபரை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய பொலிஸார், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட சிலர் மரண விசாரணையில் சாட்சியம் வழங்கினர்.

இதேவேளை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த முன்னர்

உயிரிழந்தவர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தெல்லிப்பழை சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை, மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவில் யாழ்.போதனா வைத்தியசாலையில் 

உயிரிழந்த நபரை அனுமதித்தமை தொடர்பான மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்க ஆவண செய்யுமாறு நீதிமன்ற பதிவாளருக்கு யாழ்ப்பாணம் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா உத்தரவிட்டார்.

மரண விசாரணை தொடர்பான கட்டளைக்காக எதிர்வரும் ஜனவரி 2ம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வழக்கில் உயிரிழந்த இளைஞன் சார்பில் பெருமளவான சட்டத்தரணிகள் ஆஜராகினர்.

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் சித்திரவதைகளுக்கு உள்ளன நிலையில் நவம்பர் 19ஆம் திகதி உயிரிழந்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு