யாழ்.திருநெல்வேலி - பால்பண்ணை பகுதியில் பொலிஸ் சுற்றிவளைப்பு! மூவர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.திருநெல்வேலி - பால்பண்ணை பகுதியில் பொலிஸ் சுற்றிவளைப்பு! மூவர் கைது..

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற விசேட நடவடிக்கையின் போது மூன்று பேர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.

நாடளாவிய ரீதியில் நேற்று (17) காலை முதல் விசேட பொலிஸ் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதன்படி யாழ்ப்பாண பொலிஸ் பிராந்திய பிரிவுக்குட்பட்ட திருநெல்வேலி பால்பண்ணை பகுதியிலேயே 20, 21,23 வயதுடைய மூவர் பொலிஸ் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களிடம் ஹெரோயின் மற்றும் மாவா என்பன கைப்பற்றப்பட்ட நிலையில் மூவரும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு