மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் செல்ல மறுத்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்!

ஆசிரியர் - Editor I
மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் செல்ல மறுத்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்!

ஆடியகம பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்செல்ல மறுத்த பொலிஸ் உத்தியோகத்தரை  தாக்கிய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதல் நேற்று திங்கட்கிழமை (11) இடம்பெற்றுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளானவர் குருணாகல் - ரஸ்நாயக்க பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தராவார். 

இவர் கடமை முடிந்து வீடு சென்று கொண்டிருக்கும் போது வழியில் வந்த சந்தேக நபர் தன்னை மோட்டார் சைக்கிளில் ஏற்றி தான் போகும் வழியில் இறக்கிவிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், பொலிஸ் உத்தியோகத்தர் மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்செல்ல மறுத்ததால் குறித்த சந்தேக நபர் பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கியுள்ளார்.

காயமடைந்தவர் நிக்கவெரட்டிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு