யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் 14 மீனவர்கள் கடற்படையினால் கைது.

ஆசிரியர் - Editor I
யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் 14 மீனவர்கள் கடற்படையினால் கைது.

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று(06) இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் 3 படகையும் அதிலிருந்த 14 மீனவர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை காங்கேசன்துறைக்கு அழைத்து வந்து விசாரணைகளுக்கு பின்னர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினர் ஊடாக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு