கோணவிலை சேர்ந்த 23 வயதான இளைஞன் யாழ்.நகரில் கைது!

ஆசிரியர் - Editor I
கோணவிலை சேர்ந்த 23 வயதான இளைஞன் யாழ்.நகரில் கைது!

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் கேரள கஞ்சாவுடன் இளைஞரொருவர் நேற்று (30)விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

கிளிநொச்சி கோணாவில் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரும் மீட்கப்பட்ட ஒரு கிலோ 480 கிராம் கேரள கஞ்சாவும் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் விசேட அதிரடிப் படையினரால் கையளிக்கப்பட்டது.

சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த யாழ்ப்பாணம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு