விடுதலை புலிகளின் இலட்சினை பொறித்த ரீசேட் அணிந்த இளைஞனுக்கு விளக்கமறியல்...

ஆசிரியர் - Editor I
விடுதலை புலிகளின் இலட்சினை பொறித்த ரீசேட் அணிந்த இளைஞனுக்கு விளக்கமறியல்...

யாழ்.கொடிகாம மாவீரர் நாள் நினைவேந்தலின்போது விடுதலைப் புலிகளின் இலட்சினை பொறித்த ஆடை அணிந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞன் இன்று  புதன்கிழமை சாவச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

கடந்த திங்கட்கிழமை 27ஆம் தேதி மாவீரர் நாள் அன்று கொடிக்காமத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்ட ஆடை அணிந்திருந்ததாக இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு கொடிகாமப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இன் நிலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பொலிஸாரால் சாவச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து குறித்த நபரை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார் .

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு