யாழ்.பருத்தித்துறையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனை வழிமறித்து வாள்வெட்டு...

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனை வழிமறித்து வாள்வெட்டு...

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

பருத்தித்துறை, கந்தவுடையார் வீதியை சேர்ந்த ஜெயசந்திரன் டிலக்சன் (வயது 23) என்பவரே காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் வீதியில் சென்றுகொண்டிருந்த வேளை அவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த இருவர், இளைஞரை வழிமறித்து வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு