யாழ்.பண்ணையில் விபத்து! முந்திச் செல்லும் முயற்சியில் இரு வாகனங்களுக்கிடையே சிக்கிய ஆட்டோ..

ஆசிரியர் - Editor I
யாழ்.பண்ணையில் விபத்து! முந்திச் செல்லும் முயற்சியில் இரு வாகனங்களுக்கிடையே சிக்கிய ஆட்டோ..

யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) நோயாளர் காவு வண்டியுடன், மேலும் இரண்டு வாகனங்கள் விபத்துக்குள்ளாயின.

நோயாளர் காவு வண்டிக்குப் பின்னால் வந்த முச்சக்கரவண்டி, நோயாளர் காவு வண்டியை முந்திச் செல்ல முற்பட்ட வேளை எதிரே வந்த வாகனத்துடன் மோதி, நோயாளர் காவு வண்டிக்கும் எதிரே வந்த வாகனத்துக்கும் இடையில் சிக்கி விபத்துக்குள்ளானது.

இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு