யாழ்.கொடிகாமத்தில் 10 கிலோ கஞ்சா மீட்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.கொடிகாமத்தில் 10 கிலோ கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம் - கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்  10 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் இன்று கைதுசெய்யப்பட்டார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய 38 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

இதன்போது 10 கிலோ 875 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்ததுடன் சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு