தனது வர்த்தக நிலையத்தில் பணியாற்றிய பெண்ணை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற உரிமையாளர் கைது! யாழ்.மல்லாகத்தில் சம்பவம்...

ஆசிரியர் - Editor I
தனது வர்த்தக நிலையத்தில் பணியாற்றிய பெண்ணை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற உரிமையாளர் கைது! யாழ்.மல்லாகத்தில் சம்பவம்...

தனது வர்த்தக நிலையத்தில் பணிபுரிந்த பெண் ஒருவருடன் தகாதமுறையில் நடந்துகொள்ள முயன்ற வர்த்தக நிலைய உரிமையாளர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் உள்ள குளிர்களி (ஐஸ் கிறீம்) விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்த 19 வயது யுவதிக்கு கடை உரிமையாளர் தனது கையடக்க தொலைபேசியில் ஆபாச படங்களை காட்டுவது, 

அவற்றை யுவதியின் கையடக்க தொலைபேசிக்கு அனுப்புவது போன்ற பாலியல் துஸ்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். 

அதனை அடுத்து பாதிக்கப்பட்ட யுவதியால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கடை உரிமையாளரை கைது செய்து மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் வியாழக்கிழமை முற்படுத்தினர். 

வழக்கினை விசாரித்த நீதவான் , கடை உரிமையாளரை எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு