யாழ்.பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 18 வயதான இளைஞன் பலி!

ஆசிரியர் - Editor I
யாழ்.பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 18 வயதான இளைஞன் பலி!

மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த நிலக்சன் (வயது 18) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். 

கடந்த 09ஆம் திகதி குறித்த இளைஞன் 14 வயது சிறுவனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை யாழ்ப்பாணம் பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மதிலுடன் மோதி விபத்துக்கு உள்ளானது. 

விபத்தில் இருவரும் படுகாயமடைந்த நிலையில் , யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்,

இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சிறுவன் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு