வங்காள விரிகுடாவில் தாழமுக்கத்திற்கு வாய்ப்பு! 18ம் திகதிவரை வடக்கு - கிழக்கில் மழை தொடரும்...

ஆசிரியர் - Editor I
வங்காள விரிகுடாவில் தாழமுக்கத்திற்கு வாய்ப்பு! 18ம் திகதிவரை வடக்கு - கிழக்கில் மழை தொடரும்...

மத்திய வங்காள விரிகுடாவில் நாளை தாழமுக்கம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுவதாக      (தற்போது வரை இது ஒரு காற்றுச் சுழற்சியாகவே காணப்படுகின்றது). யாழ்.பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியுள்ளதாவது,

இன்று இரவு முதல் ஈரப்பதம் நிறைந்த காற்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திற்குள் வருகைதரும். எனவே இன்று இரவு முதல் எதிர்வரும் 18.11.2023 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கனமானது முதல் மிகக் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

குறிப்பாக 14,15 மற்றும் 16ம் திகதிகளில் பல பகுதிகளுக்கும் மிகக் கன மழைக்கு வாய்ப்புள்ளது. இன்று முதல் வடக்கு மற்றும் கிழக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலைமையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதில் அவதானமாக இருப்பது அவசியம் எனவும் கூறியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு